செவ்வாய், 31 டிசம்பர், 2013

பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் சுகாதார வளாகம் கட்டித்தர கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பு.முட்லூரில் சுகாதார வளாகம் கட்டித்தர எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று...

பரங்கிப்பேட்டையில் கேசினோ பேக்கரி கிளை திறப்பு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் கேசினோ பேக்கரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரஹ்மான் டிரஸ்ட் தலைவர் அப்துல்ரஹ்மான் புதிய கிளையைத் திறந்து வைத்தார். சிதம்பரம்  நாட்டியாஞ்சலி அறக்கட்டளைச் செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். பரங்கிப்பேட்டை இசட்.முகமதுஆதில் அதை...

பரங்கிப்பேட்டை அருகே தண்ணீரின்றி வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் வாய்க்காலில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே வயல்களில் தண்ணீரின்றி வெடிப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகிறன்றனர். அரியகோஷ்டி வாய்க்காலில் போதுமான அளவிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அரியகோஷ்டி, அகரம், ஆணையாங்குப்பம், சில்லாங்குப்பம் உள்ளிட்ட...

தேர்தல் கூட்டணி: கூடுகிறது மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு

சென்னை:மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு ஆகியன குறித்து முடிவெடுக்க மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னையில் எதிர்வரும் ஜனவரி 10, 2014 அன்று தலைவர்...

திங்கள், 30 டிசம்பர், 2013

கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு:முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம்

திருச்சி:திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த டிச, 28 தேதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்   மாநில மாநாடு மற்றும்  இதையொட்டி பயங்கரவாதத்தை எதிர்த்தும்,சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இளம்பிறை எழுச்சி பேரணி  மாலை 3.30 மணியளவில்  நடைபெற்றது. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற...

இயற்கை வேளாண் விஞ்ஞானி பசுமை போராளி நம்மாழ்வார் காலமானார்!

தஞ்சாவூர்: உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்று (30ஆம் தேதி) இரவு காலமானார். விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் கோ.நம்மாழ்வார். இவர் தற்போது மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பட்டுக்கோட்டை, அத்திவெட்டி அருகே பிச்சினிக்காட்டில் உள்ள விவசாயி லெனின் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார்...

NH-45 A நான்குவழி சாலை திட்டம் அளவீடு பணி துவங்கியது

கடலூர்:விழுப்புரம் - நாகப்பட்டினம் (என்.ஹெச் 45 ஏ) புதிய நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக அளவீடு செய்யும் பணி துவங்கியது.விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க நகாய் 1,650 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அமைச்சகம் அண்மையில்...

கொலை வழக்கில் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசருக்கு மரணதண்டனை!

ரியாத்:சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அங்கு, கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்கள். கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும்.ஆனால் இந்த வழக்கை பொறுத்தமட்டில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர்...

பரங்கிப்பேட்டையில் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை:மீனவர்கள் வாழ்வை பாதுகாத்திட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகை மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு, 70 விசைப்படகுகள் பறிமுதல் என இலங்கை ராணுவம் தொடர்ந்து செய்துவரும் அட்டூழியங்களை தடுக்கவும், மீனவர்கள் வாழ்வை...

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ரேஷன் கார்டு விவரங்கள் சேகரிப்பு விவரம் தெரியாமல் மக்கள் அலைகழிப்பு

பரங்கிப்பேட்டை:ரேஷன் கார்டுகளில் உள்ள விபரங்களை வருவாய் துறையினர் சேகரிப்பது எதற்கு என்பது தெரியாமல் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பரங்கிப்பேட்டை, கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம நிர்வாக...

மதுவுக்கு எதிரான நந்தினியின் தொடரும் உண்ணாவிரதம் - வலுக்கும் ஆதரவு!

மதுரை: மதுவுக்கு எதிராக மாணவி நந்தினியின் உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம் ஆதரவு வலுக்கிறது. நேற்று 7 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ள நந்தினிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவை மற்றும் திருநெல்வேலி சட்டகல்லுரி மாணவர்கள் சேலம் மாவட்ட மாணவர்கள் இதற்கு...

சனி, 28 டிசம்பர், 2013

இறப்புச் செய்தி:ஆபிதாமா பீ

பரங்கிப்பேட்டை :காஜியார் தெருவில் மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் அவர்களின் மகளாரும், மர்ஹூம் M.Y.முஸ்தபா கமால் அவர்களின் மனைவியும், சேட்டு என்கிற  M.K. முஹம்மது கவுஸ், M.K. அக்பர் அலி, M.Kஅஸ்ரப் அலி, M.K.நூர்முஹம்மது  இவர்களின் தாயாரும்,  மர்ஹூம் ஜெய்நுல்லாபிதீன் அரபி, Z. அலாவுதீன்  இவர்களின் மாமியாருமான A. ஆபிதாமா பீ   அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்.  இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் இன்று (28.12.2013 சனிக் கிழமை) இரவு ...

செவ்வாய், 24 டிசம்பர், 2013

இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு ஆதரவு TNTJ செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

கடலூர்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில்(22.12.2013)  மஞ்சக்குப்பம் தீன் திருமண மஹாலில் நடைபெற்றது  கடலூர்,பரங்கிப்பேட்டை நெய்வேலி, மங்கலம்பேட்டை, பெண்ணா டம், திட்டக்குடி, ஆயங்குடி, மாத்தூர், மானியம்ஆடூர், ஆலம்பாடி, காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

திங்கள், 23 டிசம்பர், 2013

இறப்புச் செய்தி :P.M .சிராஜுதீன்

பரங்கிப்பேட்டை :ஹக்கா சாஹிப் தெருவில்  மர்ஹூம் பக்கீர் மாலிமார் உடைய மகனாரும் மர்ஹும்  P.M .இப்ராஹீம் (பேஷ் இமாம் தாய்பா) அவர்களின் சகோதரரும்  S கமாலுதீன் S அலிமுல்லா S முஹம்மது பிலால் S முஹம்மது பக்ருதீன் இவர்களுடைய  தகப்பனாரும்  P.M .சிராஜுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்    இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (23/12/2013) திங்கள் மாலை  4:00  மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தெரு காதிரியா பள்ளியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ......

வியாழன், 19 டிசம்பர், 2013

மனிதநேய சேவைக்காக காயிதேமில்லத் விருது பெற்றார் முஹம்மது யூனுஸ்!

புதுச்சேரி:புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில்,  கலை, இலக்கியம், பண்பாடு, மதநல்லிணக்கம், மனிதநேயம்,  சமுதாய மேம்பாடு ஆகியவைகளுக்காக  பணியாற்றி வருபவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றது. இவ்வாண்டிற்கான விருது வழங்கும்...

செவ்வாய், 17 டிசம்பர், 2013

கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது

சென்னை:கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது   என மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015-ந் தேதியோடு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 25-ந் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) செய்ய இயலாத அதாவது கையால் எழுதப்பட்ட...

2014-லும் ரேசன் கார்டில் தாள் இணைக்க முடிவு:ஸ்மார்ட் கார்டு இல்லை

சென்னை: புதிய ரேஷன் அட்டை வரும் 2014-ஆம் வழங்காமல் இணைப்புத் தாளையே கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தேசத்தின் குடிமகன் என்று தன்னை அடையாளம் காட்ட இருக்கும் ஆவணங்களில் முதலாவதாக கருதப்படுவது ரேஷன் அட்டை. அரசுக்கும், மக்களுக்கும் உள்ள உறவுக்கு பாலமாக இருப்பதும் அதுவே.தமிழக்தில் இதுவரை...

திங்கள், 16 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டை கஜ்ஜாலி தலைமையில் முதன்முறையாக கோப்பையை வென்றது மேற்கு இரயில்வே!

பரங்கிப்பேட்டை:அகில இந்திய அளவில் நடைபெற்ற 49-வது இரயில்வே பூப்பந்தட்டப் போட்டியில் முதன் முறையாக மேற்கு இரயில்வே (Western Railways) வெற்றி பெற்று கோப்பையை பெற்றுள்ளது. கடந்த 48 ஆண்டுகளாய் தேசிய அளவில் நடைபெற்று வரும் இப்பூப்பந்தாட்டப் போட்டியில் இதுவரை மேற்கு இரயில்வே கோப்பை பெற்றிடாத நிலையில், இம்முறை பரங்கிப்பேட்டை எஸ்.கே. முஹம்மது கஜ்ஜாலி தலைமையில் (கேப்டன்ஷிப்) முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது....

ஜாவா(java) வில் வைரஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் வசிக்கலாம்:சிங்கப்பூர் பிரதமர் உறுதி!

சிங்கப்பூர்:வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில்  தொழில் பார்க்கவும் சிங்கப்பூர் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் கூறியுள்ளார்.  இதுகுறித்து கூறுகையில், சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது தொழில் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கு சிங்கப்பூர் அரசு...

காங். பாஜகவுடன் கூட்டணி கிடையாது - திமுக தலைவர் கருணாநிதி!

சென்னை : 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடாது'' என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ''2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி...

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மைசூரூ, நெல்லை ரயில்களை சிதம்பரம் வரை மற்றும் பெங்களூர்-நாகூர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க கோரிக்கை

சிதம்பரம்:பயணிகள் டிக்கெட் வழங்குதல், முன்பதிவுக்கு என தனித் தனி கவுண்டர்கள் செயல்படவேண்டும் என ரயில் நிலைய ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.சிதம்பரம் ரயில் நிலைய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், ரயில் நிலைய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு...

பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன என்பதைப் பார்ப்போம். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுகவேண்டும். மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது ஆகிய ஆவணங்கள் கொடுக்க வேண்டு...

தமிழக அரசியல்:மும்முனைப் போட்டியா நான்கு முனைப் போட்டியா?

சென்னை :மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் சிக்குக் கோலத்தில் மாட்டிக் கொண்ட புள்ளிகளாக தமிழக அரசியல் கட்சிகள் தவித்து வந்தன. தற்போது அந்தக் சிக்கல் ஓரளவு குறைந்துள்ளது. நண்பன் யார் விரோதி யார் என்று நெருங்கிச் சென்று பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக தெளிவான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இரு...

சனி, 14 டிசம்பர், 2013

7 லட்சம் இந்தியர்களின் உயிரை குடிக்கும் புற்றுநோய்

  டெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் இந்தியர்கள் புற்றுநோய்க்கு பலியாவதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.உலக சுகாதார மையம் சர்வதேச புற்றுநோய் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் புற்று நோய் தாக்கம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.2012-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பபட்டு...

கடலூர் மாவட்டத்தில், கடலோரக் கிராமங்களை விழுங்கும் கடல் அரிப்பு!

கடலூர் :கடல் அரிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில், 7 கடலோரக் கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக ஒருங்கிணைந்த கடற்கரை மற்றும் கடல்சார் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடலூர் மாவட்டத்தில் நல்லவாடு தொடங்கி சிதம்பரம் வரை சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு 40-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்கள் உள்ளன....

லஞ்சம்:2 அ.தி.மு.க எம்.பிக்கள் உள்பட 11 எம்.பிக்கள் சிக்கினர்!

புதுடெல்லி: பணத்துக்காக பரிந்துரைக் கடிதம் அளிக்க ஒப்புக்கொண்டதாக இரண்டு அதிமுக எம்.பி.க்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11எம்.பி.க்கள் பற்றி ரகசிய விடியோ காட்சி வெளியானது. “ஸ்டிங் ஆபரேசன்” என்ற பெயரில் பல்வேறு ஊழல் விவகாரங்களை ரகசியமாக விடியோபடம் எடுத்து கோப்ராபோஸ்ட் இணையதள...

வரலாற்று சிறப்பு வாய்ந்த பரங்கிப்பேட்டை பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா..?

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை, பக்கிங்காம் கால்வாய் பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பில் சிக்கி சுவடு தெரியாத அளவிற்குக் காணாமல் போய் உள்ளது. இதனால் மழை, வெள்ளக் காலங்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் போய்விடும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்மக்களின் பசிப்பிணியைப் போக்க வெட்டப்பட்ட பக்கிங்காம் கால்வாய் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தரைவழி போக்குவரத்து சீர்படாத நிலையில் நீர் வழி போக்குவரத்து முதன்மையானதாக கருதப்பட்ட காலத்தில் இந்த கால்வாய் மூலம் வாணிபம்...

வெள்ளி, 13 டிசம்பர், 2013

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

கடலூர்:வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார் இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள...

வியாழன், 12 டிசம்பர், 2013

தொடரை வென்ற தென் ஆப்பிரிக்க:கடைசி போட்டியில் மழையால் அவமானத்திலிருந்து தப்பிய இந்தியா

செஞ்சுரியன் :இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை வென்றது  தென் ஆப்பிரிக்க  3-வது ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. முன்னதாக, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் டி வில்லியர்ஸ் சதம் அடுத்துக் கைகொடுத்தனர். இதனால் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றிருந்தது. எனவே, 3-வது ஆட்டம்...

புதன், 11 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டை அருகே சாயப்பட்டறை அமைப்பதற்கு 20 கிராம மக்கள் தொடர் போராட்டம்...அறிவிப்பு!

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே உள்ள சைமா டெக்ஸ்டைல் பார்க் நிறுவனம் அமைவதற்கு 18 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சுற்றி உள்ள கடலோர கிராமங்கள்  அருகில் அமைய உள்ள சைமா டெக்ஸ்டைல் பார்க் நிறுவனம் தனது துவக்க பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம்...

இறப்புச் செய்தி:சாஜஹான்

பரங்கிப்பேட்டை :கலிமா நகரில்  மர்ஹும் குலாம் உசேன் அவர்களின் மகனாரும், இலியாஸ்,மற்றும்  அலி இவர்களின் தகப்பனாரும் வட்டாதைக்கால் S. A. பாஷா   உடைய அண்ணன் மகனாருமாகிய சாஜஹான் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்  இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (11- 12 - 2013) புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு நல்லடக்கம் வட்டாத் தைக்காலில் இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ்  இலைஹி ராஜிவூன்...  ...

மோடி பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில் பா.ஜ.க தோல்வி!

புதுடெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியுள்ளது. பா.ஜ.க செல்வாக்கு மிகுந்த ரோஹிணி, துவாரகா,சுல்தான்பூர், மஜ்ரா, ஷஹ்தாரா, சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளில் மோடிபிரச்சாரம்...

கடலூரில் 14–ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்:தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 14–ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடைய 19 முதல் 40 வயதுக்குட் பட்டவர்கள் தங்கள்...

செவ்வாய், 10 டிசம்பர், 2013

டெல்லி சட்டசபைத் தேர்தல் - பறிபோகும் வெற்றியாளர்கள் பதவி?

புது டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகும் எனத் தெரிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 31 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன. இதில் 25...

கடலூர் கெடிலம் ஆற்றில் நீர் நாய்கள் அண்ணா பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

கடலூர் : கடலூர், கெடிலம் ஆற்றில் விளையாடிய நீர் நாய்களை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால், அண்ணா பாலத்தில் போக்குவரத்து பாதித்தது.கடலூரில் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறுகளில் சமீபகாலமாக நீர் நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு தேடி ஆற்றில் நீந்தி வரும் இந்த நாய்கள், ஆற்றில் துள்ளிக் குதிக்கும் மீன்களை...

பேஸ்புக்கில் வரப்போகுது டிஸ் லைக் ஆப்ஷன்...

இன்று பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் லைக் பட்டன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் அதாங்க ஒருத்தரோட ஸ்டேட்டஸ் அல்லது போட்டோ உங்களுக்கு புடிச்சிருந்தா லைக் பண்ணுவிங்களே அதான்.இப்போ பேஸ்புக்கில் இருக்குறவங்களுக்கு அடுத்த ஆப்பு சீக்கிரமே வரப்போகுது என்னான்னு தானே நீங்க...

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸை கைவிட்ட மக்கள்! சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களில் மூன்றிலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது...

திங்கள், 9 டிசம்பர், 2013

மனித உடலுக்குள்ளும் ஊடுருவிய பி.டி; அதிர வைக்கும் ஓர் ஆராய்ச்சி முடிவு

வேண்டாம், இந்த மரபணு மாற்றுப் பயிர்கள்! இயற்கைக்கு எதிராக விளையாட வேண்டாம்! அது மனித வாழ்க்கைக்கே உலை வைத்துவிடும்! இப்படியெல்லாம் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல் கேட்கிறது.இப்படிப்பட்ட கருத்துகள் இருக்க, மரபணு மாற்று விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆட்சியாளர்கள் முட்டுக் கொடுப்பதால் உலகம்...

சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதியில் கலவரம்...! வாகனங்கள் எரிப்பு...!

சிங்கப்பூர்நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 ம...ணியளவில் சிங்கையின் குட்டி இந்தியாவில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை கடக்க முயன்ற சுமார் 33 வயதுடைய இந்திய ஆடவர் ஒருவர் மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அடிப்பட்ட 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸும் போலீஸும் வந்து சேர்ந்தன....

ஜெயலலிதா, கருணாநிதி கொடிய குற்றவாளிகள்: மாணவி அதிரடி கடிதம்!

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.    ...

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

இடநெருக்கடியில் திணறும் மாவட்டத் தலைநகரான கடலூர் பஸ் நிலையம்!

கடலூர் :மாவட்டத் தலைநகரான கடலூரில் உள்ள பஸ் நிலையம் இடநெருக்கடியிலும் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாவது தொடருகிறது. கடலூர் பஸ் நிலையம் சுமார் 1.30 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருகிறது. தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் இந்த பஸ்...

வங்கக் கடலில் உருவானது 'மாதி' புதிய புயல்! கடலூர் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூர்:வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டனலம் புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. இப்புதிய புயலுக்கு மாதி(MADI) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது. இப்புதிய புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மாதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.  மாதி புயல் காரணமாக கடலூர்...

சனி, 7 டிசம்பர், 2013

வேறு ATM களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்! இனியாவது பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி ATM அமைக்குமா..?

பரங்கிப்பேட்டை:வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்...

ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று ரேஷன் கார்டு மற்றும் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போ...

+2 & SSLC அரசு பொதுத்தேர்வு :தேர்வுகால அட்டவணை வெளியீடு

சென்னை:+2 பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதியும், sslc எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதியும் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.மார்ச் 25 வரை நடைபெறும் பிளஸ் 2 தேர்வை சுமார் 9 லட்சம் பேரும், ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 11 லட்சம் பேரும் எழுதுகின்றன...

வெள்ளி, 6 டிசம்பர், 2013

சிதம்பரத்தில் தமுமுகவின் டிசம்பர் 6 மக்கள் திரள் போராட்டம்..!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ம் நாளில் தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றன.இந்த வருடமும் தமுமுக,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,இந்திய தேசிய லீக் கட்சி (தடா ரஹீம்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழகம் முழுவதிலும் கண்டன...

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய ‘நீர்த்தாரை’ காட்சி கடலூர் மீனவரின் செல்போன் காமிராவில் சிக்கியது

  கடலூர் :கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய நீர்த்தாரை காட்சி, கடலூர் மீனவரின் செல்போன் காமிராவில் சிக்கியது. கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர் மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர...

நெல்ஸன் மண்டேலா மரணம்

ஜோஹன்னஸ்பர்க்: நிறவெறி மிகுந்திருந்த வெள்ளையர்களிடமிருந்து தென் ஆப்ரிக்காவுக்கு  விடுதலை பெற்றுத் தந்த  வீரரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மக்கள் தலைவர் நெல்ஸன் மண்டலோ  மரணமடைந்தார். அவருக்கு வயது 95 ஆகும். கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று...

ஏமாற்றத்தின் 21 ஆண்டுகள்: இன்று டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தினம்!

புதுடெல்லி: உலக நாடுகளின் முன்னால் இந்தியாவை தலை குனிய வைத்து, போலீசும், இராணுவமும், அரசும், நீதி பீடமும் பார்வையாளர்களாக மாற ஹிந்துத்துவா ஃபாசிச பரிவார சக்திகள் இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமுமான பாபரி மஸ்ஜிதைத் தகர்த்து நாளை 21 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 1992 டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி பாபரி...

வியாழன், 5 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் 2ம் நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதிகளில் கடந்த நான்கு...

டிசம்பர் 6 இந்திய இறையாண்மை தகர்க்கப்பட்ட நாள்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று...

களை கட்டிய முகநூல் முச்சந்தி குழுமத்தின் சிறப்பு பட்டிமன்றம் !

முகநூல் முச்சந்தி குழுமத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி  முகநூல் முச்சந்தி யின் சார்பில் கடந்த டிசம்பர் 2 மற்றும் 3 தேதியில் சிறப்பு பட்டி மன்றம் முகநூல் முச்சந்தி குழுமத்தில் நடைபெற்றது . ஆனந்த வாழ்க்கை திருமணத்திற்கு முன்பே..!திருமணத்திற்கு பின்பே..! என்கிற தலைப்பில நடைப்பெற்ற  இச்சிறப்பு பட்டிமன்றத்தின்...