திங்கள், 9 டிசம்பர், 2013

சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதியில் கலவரம்...! வாகனங்கள் எரிப்பு...!

சிங்கப்பூர்நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 ம...ணியளவில் சிங்கையின் குட்டி இந்தியாவில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை கடக்க முயன்ற சுமார் 33 வயதுடைய இந்திய ஆடவர் ஒருவர் மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அடிப்பட்ட 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸும் போலீஸும் வந்து சேர்ந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அங்கே குடித்துவிட்டு சுற்றித்திரிந்த சில இந்திய தமிழ் ஊழியர்கள் அந்த ஆம்புலன்ஸையும், போலிஸ் வாகனத்தையும் அடித்து நொருக்கி தீயிட்டு விட்டனர். இது மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது.... சட்டம் ஒழுங்குக்கு பெயர் பெற்ற சிங்கையில் கடந்த 40, 50 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. பிழைக்க வந்த மண்ணில் குடிவெறியில் இவர்கள் செய்யும் காரியத்தால் எல்லோருக்கும் பாதிப்பு. ஏற்கனவே சிங்கப்பூரர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக உள்ளது. இதையும் மீறி சிங்கை அரசு வெளிநாட்டு ஊழியர்களை தருவித்து கொண்டுள்ளது. இதனால் வேலையிழந்த சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின் மீது கோபத்தில் இருக்கின்றனர். இங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றிப்பெற்றதற்கு மக்களின் இந்த கோபம்தான் காரணம். இனி சிங்கை அரசாங்கம் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும். இந்திய தமிழர்கள் தன் தலையில் தானே மண்ணள்ளி கொட்டிக்கொண்டார்கள். இதன் பின்விளைவுகளை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. சிங்கப்பூரில் பரவலாக வெளியிடங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களின் நண்பர்களை காண்பதற்காக சிராங்கூன் ரோட்டில் உள்ள லிட்டில் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவர். நண்பர்கள் கூடினால் சொல்லவா வேண்டும், ஒரே குடியும் கும்மாளமும்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்துடன் சிராங்கூன் ரோட்டிற்கு செல்வதற்கே குடும்பங்களுடன் வாழும் மற்ற இந்தியர்கள் அஞ்சுவர். ஏனெனில் கூட்டம் மிக நெரிசலாக இருக்கும். பொதுயிடங்களில் உட்கார்ந்து கொண்டு வழிவிடமாடார்கள். சிலர் வேண்டுமென்றே கூட்டத்தில் புகுந்து பெண்களை இடிப்பர். இந்த தொல்லைகளால் பல இந்திய குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு செல்வதை தவிர்பர். இதுவரை இவர்களை சுதந்திரமாக லிட்டில் இந்தியாவில் சுற்றித்திரியவிட்ட போலிஸார், இனி கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட போவது இவர்கள் மட்டுமல்ல, அந்த பகுதியில் வியாபாரம் செய்யும் நம் இந்தியர்களும் தான். குறிப்பாக தமிழர்கள் தான். இந்த வெளிநாட்டு ஊழியர்களை நம்பிதான் அவர்களின் வியாபாரமே உள்ளது. இனி கெடுபிடி அதிகரித்தால் அவர்களின் வியாபாரம் கேள்விக்குறிதான். இதனால் வேலையிழந்து, பொருளாதாரத்தை இழக்கப்போவது குறிப்பாக நம் இந்திய தமிழர்கள் தான். சிங்கை அரசாங்கம் மிகத்தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. குற்றம் நிறுபிக்கப்பட்டால் குறைந்தது 5 லிருந்து 10 வருடங்கள் சிறைத்தண்டனையும், 10, 15 பெரம்படியும் கிடைக்கும்.




நன்றி:செய்தி - ஹாஜா மொய்தீன் சிங்கை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக