ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுகவேண்டும். மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது ஆகிய ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105ம், மேல்நிலை பொதுத்தேர்வு (+2) பட்டியல் ரூ.505ம் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள் கால வரையறைக்குள் கிடைக்கும்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக