செவ்வாய், 24 டிசம்பர், 2013

இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு ஆதரவு TNTJ செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

கடலூர்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில்(22.12.2013)  மஞ்சக்குப்பம் தீன் திருமண மஹாலில் நடைபெற்றது  கடலூர்,பரங்கிப்பேட்டை நெய்வேலி, மங்கலம்பேட்டை, பெண்ணா டம், திட்டக்குடி, ஆயங்குடி, மாத்தூர், மானியம்ஆடூர், ஆலம்பாடி, காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஷ்ரப்அலி, மாவட்ட பொருளாளர் சிராஜுதின் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் ஆவடி இப்ராஹிம், பத்ருல்ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆவடி இப்ராகிம் பேசும்போது, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5 தனி இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தருவோம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். இன்றுவரை இது குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

எனவே, தமிழகத்தில் 7 சதவீத இட ஒதுக்கீட்டையும், மத்தியில் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்க வலியுறுத்தி ஜனவரி 28ம் தேதி தமிழ்நாட்டில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது, என்றார்.
இட ஒதுக்கீட்டை வழங்கும் கட்சிக்கே வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும். தேவயானி விஷயத்தில் இந்தியாவை அவமதித்த அமெரிக்காவுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக