ஞாயிறு, 8 டிசம்பர், 2013

வங்கக் கடலில் உருவானது 'மாதி' புதிய புயல்! கடலூர் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு


கடலூர்:வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டனலம் புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. இப்புதிய புயலுக்கு மாதி(MADI) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது. இப்புதிய புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மாதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.  மாதி புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்தால் பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பியதை காணமுடிந்தது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது.
தற்போது, இந்த புயல் சின்னம் சென்னைக்கு தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.  இந்த மாதி  புயலானது வடக்கு, வடக்கிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 48 மணி நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி,  கடலூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புயல் எதிரொலியால் தேவனாம்பட்டினம் மற்றும் துறைமுகப்பகுதி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில்  தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கடலூர் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் 3–வது நாளாக மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மற்ற நாட்களை விட நேற்று கடல் துறைமுகம் அருகேயுள்ள முகத்துவார பகுதிகளில் கடல் அலைகள் சீற்றம் அதிகமாக இருந்தது. அங்கு பல மீட்டர் உயரம் கடல் அலைகள் சீறி பாய்ந்தை காணமுடிந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக