சென்னை : 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடாது'' என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ''2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடாது. 2G உள்ளிட்ட ஊழல்களுக்கு காங்கிரசே காரணம்.
அன்றைய வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜக வேறு. இன்றைய பாஜக வேறு. அதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
பொதுகுழுவில் விலைவாசி உயர்வு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மின்வெட்டை சீரமைக்காததைக் கண்டித்தும் சேதுசமுத்திர திட்டத்தை முடக்கும் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரியம், டாஸ்மாக் தொழிலாளர்களின் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும்
கேரள அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்களை வெளியேற்ற கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சினை குறித்து மத்திய-மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி அட்டப்பாடியில் காலம் காலமாக இருந்து வரும் தமிழர்களை காப்பாற்ற முன்வரவேண்டும்.
சிங்கப்பூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் அங்கு தமிழர்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அவர்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு சிங்கப்பூர் அரசுடன் பேச்சு நடத்த வேண்டும். என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக