திங்கள், 16 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டை கஜ்ஜாலி தலைமையில் முதன்முறையாக கோப்பையை வென்றது மேற்கு இரயில்வே!

பரங்கிப்பேட்டை:அகில இந்திய அளவில் நடைபெற்ற 49-வது இரயில்வே பூப்பந்தட்டப் போட்டியில் முதன் முறையாக மேற்கு இரயில்வே (Western Railways) வெற்றி பெற்று கோப்பையை பெற்றுள்ளது. கடந்த 48 ஆண்டுகளாய் தேசிய அளவில் நடைபெற்று வரும் இப்பூப்பந்தாட்டப் போட்டியில் இதுவரை மேற்கு இரயில்வே கோப்பை பெற்றிடாத நிலையில், இம்முறை பரங்கிப்பேட்டை எஸ்.கே. முஹம்மது கஜ்ஜாலி தலைமையில் (கேப்டன்ஷிப்) முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 11ந்தேதி முதல் 14ந்தேதி வரை செகந்திராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பரங்கிப்பேட்டை எஸ்.கே. முஹம்மது கஜ்ஜாலி கேப்டன்ஷிப் மேற்கு ரயில்வே வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்த அணியின் பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த எஸ். செந்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டியின் பரிசளிப்பு விழாவில் இரயில்வே துணை பொது மேலாளர் கே.எல். பாண்டே வெற்றி கோப்பையை பரங்கிப்பேட்டை எஸ்.கே. முஹம்மது கஜ்ஜாலி மற்றும் மேற்கு இரயில்வே அணியினரிடம் வழங்கினார்.




பரங்கிப்பேட்டை மேட்டுத் தெருவை சார்ந்த எஸ்.கே. முஹம்மது கஜ்ஜாலியின் திறமையான ஆட்டத்திற்காக ஸ்டார் ஆஃப் இந்தியா என்கிற சிறப்பு விருதினையும் ஏற்கனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பரங்கிப்பேட்டையைச் சார்ந்தவரான இவருக்கு பரங்கிப்பேட்டை BMD கிளப் உறுப்பினர்கள் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.  மேலும் இவரது வெற்றியினை வாசகர்களுடன் இணைந்து MYPNO மற்றும்
PNO Express ம் வாழ்த்துகிறது

நன்றி :செய்தி,MYPNO

0 கருத்துகள்:

கருத்துரையிடுக