திங்கள், 30 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டையில் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை:மீனவர்கள் வாழ்வை பாதுகாத்திட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்
தினர்.
நாகை மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு, 70 விசைப்படகுகள் பறிமுதல் என இலங்கை ராணுவம் தொடர்ந்து செய்துவரும் அட்டூழியங்களை தடுக்கவும், மீனவர்கள் வாழ்வை பாதுகாத்திட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாஸ்கரன், இணை செயலர் ரமேஷ்பாபு, மாவட்ட செயலர் வைத்தியலிங்
கம் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மா.கம்யூ., மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், செயலர்கள் குப்புசாமி, காந்தி, ஜெயசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக