வியாழன், 19 டிசம்பர், 2013

மனிதநேய சேவைக்காக காயிதேமில்லத் விருது பெற்றார் முஹம்மது யூனுஸ்!


புதுச்சேரி:புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில்,  கலை, இலக்கியம், பண்பாடு, மதநல்லிணக்கம், மனிதநேயம்,  சமுதாய மேம்பாடு ஆகியவைகளுக்காக  பணியாற்றி வருபவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றது. இவ்வாண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை புதுச்சேரி க்ரீன் பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது
சப்தகிரி குழுமங்களின் மேலாண் இயக்குநர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைப்பின் செயலாளர் செல்வன், வரவேற்புரையாற்றினார். உசேன் நோக்கவுரையாற்றினார். தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபையத்துல்லா, கவிதை உறவு இதழாசிரியர் ராதாகிருஷ்ணன், பேராசிரியர் அஹமது மரைக்காயர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
புதுச்சேரி சபாநாயகர் சபாபதி, புதுச்சேரி அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ்-க்கு காயிதேமில்லத் விருதினை வழங்கினார்.


காந்தியடிகள் விருது மூத்த குடிமக்கள் சங்க அய்யருக்கும், மகாகவி இக்பால் விருது, புலவர் நாச்சிக்குளத்தார் முஹம்மது யூசுப்-க்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பரங்கிப்பேட்டையிலிருந்து ஏராளமானோர் கார்-வேன் உள்ளிட்ட 23 வாகனங்கள் மூலம் புதுச்சேரி சென்றிருந்தனர். இறுதியில் நல்லாசிரியர் முல்லைவாணன் நன்றியுரையாற்றினார்.
நன்றி:MYPNO

0 கருத்துகள்:

கருத்துரையிடுக