செவ்வாய், 31 டிசம்பர், 2013

தேர்தல் கூட்டணி: கூடுகிறது மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு

சென்னை:மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு ஆகியன குறித்து முடிவெடுக்க மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னையில் எதிர்வரும் ஜனவரி 10, 2014 அன்று தலைவர் ஜே.எஸ்.ரிபாயி தலைமையில் நடைபெறவிருக்கிறது. அதில் அரசியல் நிலவரங்கள் குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்புகள் குறித்தும், அணிகளின் சாதக, பாதகங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என நேற்று (24.12.2013) நடந்த கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
என்று பத்திரிகை அறிக்கை விடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக