:மாவட்டத் தலைநகரான கடலூரில் உள்ள பஸ் நிலையம் இடநெருக்கடியிலும் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாவது தொடருகிறது.
கடலூர் பஸ் நிலையம் சுமார் 1.30 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருகிறது. தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒரே நேரத்தில் 30 பஸ்களுக்கு மேல் நிறுத்தும் அளவுக்கு இடவசதி இல்லை.
பஸ்ஸýக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் கீழே அசுத்தமாக இருக்கும் இடத்தில்தான் அமருகின்றனர். மேலும் சுகாதாரமான குடிநீர், இலவச கழிவறை வசதியும் இல்லை.
கூடுதல் கட்டணம் வசூல்: பஸ் நிலையத்திலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான நவீன கழிவறை, ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் உள்ளது. சுகாதாரமற்ற அந்த கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பஸ் நிலையத்தின் அருகில் நகராட்சிக்குச் சொந்தமான இரு சக்கர வாகன நிறுத்தம் கூட இல்லை. ஆனால் பஸ் நிலையத்தைச் சுற்றிலும் 5 தனியார் ஸ்டாண்டுகள் உள்ளன. பராமரிப்பற்ற-பாதுகாப்பற்ற இந்த ஸ்டாண்டுகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை அடைகின்றனர்.
ஆக்கிரமிப்பின் பிடியில்.. ஏற்கெனவே இடநெருக்கடியில் திணறி வரும் பஸ் நிலையத்தில் உள்ள பல பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.
ஆக்கிரமிப்பு பெருகி வருவதால், பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்ல கடும் சிரமமடைகின்றனர். விபத்து அபாயமும் உள்ளது.
கால்நடைகளின் புகலிடம்: இரவு 8 மணிக்கெல்லாம் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓய்வெடுக்க பஸ் நிலையத்துக்குள் புகுந்து விடுகின்றன. இவை பயணிகளை முட்டித்தள்ளுகின்றன.
விடிவு எப்போது?: புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 3 ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அமைந்தபாடில்லை. பல காரணங்களால் இத்திட்டம் தள்ளிப் போடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நவீன வசதிகளுடன் பஸ் நிலையம் கட்ட மாற்று இடம் கோரப்பட்டுள்ளது. கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்குச் சொந்தமான ஒரு இடத்துக்கு பஸ் நிலையத்தை மாற்றுவது குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றனர்
கடலூர் பஸ் நிலையம் சுமார் 1.30 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருகிறது. தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒரே நேரத்தில் 30 பஸ்களுக்கு மேல் நிறுத்தும் அளவுக்கு இடவசதி இல்லை.
பஸ்ஸýக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் கீழே அசுத்தமாக இருக்கும் இடத்தில்தான் அமருகின்றனர். மேலும் சுகாதாரமான குடிநீர், இலவச கழிவறை வசதியும் இல்லை.
கூடுதல் கட்டணம் வசூல்: பஸ் நிலையத்திலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான நவீன கழிவறை, ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் உள்ளது. சுகாதாரமற்ற அந்த கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பஸ் நிலையத்தின் அருகில் நகராட்சிக்குச் சொந்தமான இரு சக்கர வாகன நிறுத்தம் கூட இல்லை. ஆனால் பஸ் நிலையத்தைச் சுற்றிலும் 5 தனியார் ஸ்டாண்டுகள் உள்ளன. பராமரிப்பற்ற-பாதுகாப்பற்ற இந்த ஸ்டாண்டுகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை அடைகின்றனர்.
ஆக்கிரமிப்பின் பிடியில்.. ஏற்கெனவே இடநெருக்கடியில் திணறி வரும் பஸ் நிலையத்தில் உள்ள பல பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.
ஆக்கிரமிப்பு பெருகி வருவதால், பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்ல கடும் சிரமமடைகின்றனர். விபத்து அபாயமும் உள்ளது.
கால்நடைகளின் புகலிடம்: இரவு 8 மணிக்கெல்லாம் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓய்வெடுக்க பஸ் நிலையத்துக்குள் புகுந்து விடுகின்றன. இவை பயணிகளை முட்டித்தள்ளுகின்றன.
விடிவு எப்போது?: புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 3 ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அமைந்தபாடில்லை. பல காரணங்களால் இத்திட்டம் தள்ளிப் போடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நவீன வசதிகளுடன் பஸ் நிலையம் கட்ட மாற்று இடம் கோரப்பட்டுள்ளது. கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்குச் சொந்தமான ஒரு இடத்துக்கு பஸ் நிலையத்தை மாற்றுவது குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக