செவ்வாய், 31 டிசம்பர், 2013

பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் சுகாதார வளாகம் கட்டித்தர கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பு.முட்லூரில் சுகாதார வளாகம் கட்டித்தர எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
மேலும் பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் கடலூர் செல்வதற்கும், பு.முட்லூரை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் இங்கிருந்து கடலூர், சிதம்பரத்திற்கு பஸ் ஏறி செல்கின்றனர்.
இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மிகவும் முக்கியம் வாய்ந்த இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு சுகாதார வளாகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பு.முட்லூரில் இருந்து கடலூர், சிதம்பரம் செல்லுபவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டும். அவசரத்திற்காக மறைவான இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பஸ் பயணிகள் நலன் கருதி பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் சுகாதார வளாகம் கட்டித்தர எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக