சிதம்பரம்:பயணிகள் டிக்கெட் வழங்குதல்,
முன்பதிவுக்கு என தனித் தனி கவுண்டர்கள் செயல்படவேண்டும் என ரயில் நிலைய ஆலோசனைக்
கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.சிதம்பரம் ரயில் நிலைய
உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், ரயில் நிலைய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி கோட்ட வர்த்தக உதவி மேலாளர் அனுபவ்
கவுசிக் தலைமை தாங்கினார். இதில் ரயில் நிலைய மேலாளர்கள் கனகராஜ், கணேஷ் மற்றும்
ரயில்வே அதிகாரிகள், உறுப்பினர்கள் நுகர்வோர் குழுமம் செயலாளர் அப்பாவு, டாக்டர்
மணவாளன், தொழிலதிபர் சுவேதாகுமார், ராமச்சந்திரன், மூர்த்தி உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.கூட்டத்தில் ரயில் நிலையத்தில் இரண்டு டிக்கெட் கவுண்டர்கள் இருந்தும்,
ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. இந்த ஒரு கவுண்டரில் பயணிகள் டிக்கெட் வழங்குவது,
முன்பதிவு மற்றும் தட்கால் முறை முன்பதிவு ஆகியவை செய்யப்படுகிறது.
ஒரே கவுண்டரில் கால அளவு ஒதுக்கீடு செய்து பராமரிப்பதாலும், கவுண்டரில் சரியாக
ஆட்கள் இல்லாமல் இருப்பதால் ரயில் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முன்பதிவு
செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டியும், அல்லது மறுநாள் வந்து பதிவு செய்ய
வேண்டிய நிலையில் உள்ளது.
முன் பதிவுக்கென தனி கவுண்டர் திறக்க வேண்டும். முன் பதிவு கவுண்டர் வரிசை,
தட்கால் முன்பதிவு வரிசை போன்ற விபரங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை-திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்
இரண்டையும் சிதம்பரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.சிதம்பரம் ரயில் நிலையம்
வழியாக சென்ற செங்கோட்டை பாசஞ்சர், திருப்பதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்க
வேண்டும்.
திருப்பதி வாராந்திர ரயில் தினம் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புவனேஸ்வர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்.நடைமேடை அறிவிப்பு டிஜிட்டல் போர்டுக்கு மின் இணைப்பு
வழங்க வேண்டும். ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். பார்சல் சர்வீஸ் மீண்டும் துவக்க வேண்டும் உள்ளிட்ட பல
கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்
பெங்களூர்-நாகூர் பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய ஆலோசனை குழுக் கூட்டம் ரயில் நிலைய வளாகத்தில் திருச்சி ரயில்வே கோட்ட துணை வணிக மேலாளர் அஜய்கவுசிக் தலைமையில் அண்மையில் நடந்தது.
கூட்டத்திற்கு நிலைய மேலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ஆலோசனை குழு உறுப்பினர்கள் ராஜயோகக்குமார், பாலசுப்பிரமணியன், நடராஜன், சிவகுமார், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் கடலூர் முதுநகர்-திருச்சி, பெங்களூர்-நாகூர் பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். நடைபாதை மற்றும் நிழலுக்கான மேற்கூரையை கம்மியம்பேட்டை வரையில் நீட்டிக்க வேண்டும். எந்த பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு பெயர்ப் பலகை அமைக்க வேண்டும்.
மூடிக் கிடக்கும் சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன் வைத்தனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து கோட்ட மேலாளரிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வணிக மேலாளர் அஜய்கவுசிக் தெரிவித்தார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய ஆலோசனை குழுக் கூட்டம் ரயில் நிலைய வளாகத்தில் திருச்சி ரயில்வே கோட்ட துணை வணிக மேலாளர் அஜய்கவுசிக் தலைமையில் அண்மையில் நடந்தது.
கூட்டத்திற்கு நிலைய மேலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ஆலோசனை குழு உறுப்பினர்கள் ராஜயோகக்குமார், பாலசுப்பிரமணியன், நடராஜன், சிவகுமார், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் கடலூர் முதுநகர்-திருச்சி, பெங்களூர்-நாகூர் பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். நடைபாதை மற்றும் நிழலுக்கான மேற்கூரையை கம்மியம்பேட்டை வரையில் நீட்டிக்க வேண்டும். எந்த பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு பெயர்ப் பலகை அமைக்க வேண்டும்.
மூடிக் கிடக்கும் சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன் வைத்தனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து கோட்ட மேலாளரிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வணிக மேலாளர் அஜய்கவுசிக் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக