செவ்வாய், 10 டிசம்பர், 2013

டெல்லி சட்டசபைத் தேர்தல் - பறிபோகும் வெற்றியாளர்கள் பதவி?

புது டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 31 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன. இதில் 25 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளன. இதில் முன்னணி வகிப்பவர்கள் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள்தான். அதாவது 17 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மீது கொலை குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.
மேலும், பாரதீய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 50 சதவீத எம்.எல்.ஏக்கள் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர் நோக்கி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும், காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சிரோன் மணி அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சுயேட்சை சேர்ந்த தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக