வெள்ளி, 6 டிசம்பர், 2013

நெல்ஸன் மண்டேலா மரணம்

ஜோஹன்னஸ்பர்க்: நிறவெறி மிகுந்திருந்த வெள்ளையர்களிடமிருந்து தென் ஆப்ரிக்காவுக்கு  விடுதலை பெற்றுத் தந்த  வீரரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மக்கள் தலைவர் நெல்ஸன் மண்டலோ  மரணமடைந்தார்.
அவருக்கு வயது 95 ஆகும். கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக  நோயுற்றுச் சிகிச்சையில் இருந்த நெல்ஸன்  மண்டேலாவின் மரணம் பற்றி தற்போதைய தென்னாபிரிக்க  அதிபர் ஜேக்கப் ஜூமா அதிகாரப்பூர்வமாக  அறிவித்தார்.
தென்னாப்பரிக்காவில் உள்ள ட்ரான்ஸ்கி பிரதேசத்தில்  1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் நாள்  பிறந்த நெல்ஸன் மண்டேலாவின் முப்பாட்டனார் தென்னாப்பிரிக்காவின் தற்போதைய கிழக்குப் பிரதேசமாகத் திகழும்   நெல்ஸன் பிறந்த ட்ரான்ஸ்கியன் பகுதியை ஆண்டு வந்த மன்னராவார். அவரது மகன்களுள் ஒருவரான மண்டேலா, நெல்ஸனின் பாட்டனாராவார்.
மண்டேலா தமது கல்வியைத் தென்னாப்பிரிக்காவிலும் லண்டனிலும் பெற்று 1941 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். 1948 முதல் நேரடி அரசியலில் பங்கேற்றார்  ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
பெரும்பான்மையாகக் கறுப்பின மக்கள் வாழும் தென்னாப்பிரிக்காவைச் சிறுபான்மையினரான வெள்ளையர்கள்  நிறவெறியுடன் ஆண்டு கொண்டிருந்தனர். இதனால்  மண்டேலா 1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார்.
போரட்டத்தின் காரணமாக 27 ஆண்டுகளாகச் சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டு நெல்ஸன் மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். 1999 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
மண்டேலாவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக