வெள்ளி, 6 டிசம்பர், 2013

சிதம்பரத்தில் தமுமுகவின் டிசம்பர் 6 மக்கள் திரள் போராட்டம்..!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ம் நாளில் தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றன.இந்த வருடமும் தமுமுக,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,இந்திய தேசிய லீக் கட்சி (தடா ரஹீம்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழகம் முழுவதிலும் கண்டன
ஆர்ப்பாட்டங்களும்,கண்டன பொதுக் கூட்டங்களும் நடத்தப் பட்டன.
கடலூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடலூர் உழவர் சந்தை பகுதியிலும்,சிதம்பரத்தில் காந்தி சிலை பகுதியிலும் “மக்கள் திரள் ஆர்பாட்டம்” நடத்தப் பட்டன.
 
கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் இன்று மாலை 4 மணிக்கு பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மக்கள் திரள் ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் ஏ.எம்.முஹம்மது அய்யூப் தலைமையில் நடைபெற்றது.
தமுமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெ.அஸ்லம்,மமக மாவட்ட செயலாளர் வி.இசட்.ஆஷிக் நூர்,மாவட்ட பொருளாளர் சவுக்கத் அலி கான்,முன்னாள் மமக மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரபாத் உள்ளிட்ட மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்,திராவிடர் கழக பேச்சாளர் யாழ் திலீபன்,கடலூர் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.முஹம்மது யூனுஸ் மற்றும் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஜமாத்துகளின் நிர்வாகிகள்,உலமாக்கள்,அரசியல் கட்சிகள்,சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது இறுதியாக கண்டன உரை நிகழ்த்தினார்.
பரங்கிப்பேட்டை ,லால்பேட்டை,ஆயங்குடி,எள்ளேரி,கொள்ளுமேடு,
மானியம்ஆடூர்,ரெட்டியூஉள்ளிட்டர்,காட்டுமன்னார்குடி,கந்தகுமாரன்,சிதம்பரம்,
புவனகிரி,பின்னத்தூர்,பி.முட்லூர், கிள்ளை
 உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெருந் திரளான தமுமுகவினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 




 












இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை அருகே,  பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும், பாபர் மஸ்ஜித்  இடிப்பு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும்நேற்று இந்திய தவ்ஹீத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலர் ஹமீது கவுஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யூனுஸ், பொருளாளர் நசீர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் கமாலுதீன் கண்டன உரையாற்றினார். காங்., மாவட்ட பொதுச் செயலர் ஜெகநாதன், நிர்வாகி அல்ஹாஸ் அறக்கட்டளை செய்யது ஆரீப், நகர தலைவர் எஹயா மரைக்காயர், சாஹுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக