
முகநூல் முச்சந்தி யின் சார்பில் கடந்த டிசம்பர் 2 மற்றும் 3 தேதியில் சிறப்பு பட்டி மன்றம் முகநூல் முச்சந்தி குழுமத்தில் நடைபெற்றது .
ஆனந்த வாழ்க்கை திருமணத்திற்கு முன்பே..!திருமணத்திற்கு பின்பே..! என்கிற தலைப்பில நடைப்பெற்ற இச்சிறப்பு பட்டிமன்றத்தின்
நடுவராக சொல் வேந்தர் சிங்கை சிங்கம் ஜனாப்: ஹாஜா மெய்தீன் (சிங்கை) தனக்குரிய நகைச்சுவை பாணியில் தனது அழகிய நடுவர் பதிவுகளை வைத்தார்
ஆனந்த வாழ்க்கை திருமணத்திற்கு முன்பே..! என்ற தலைப்பின் கீழ் பங்கேற்ற அணியில் 1.அதிரடி.அப்துல் பாசித் 2 .அன்பர்.அன்வர் சாதாத் 3.இளம் புயல்.காதர் அலி ஆகியோரும் ஆனந்த வாழ்க்கை திருமணத்திற்கு பின்பே..! என்கிற அணியில் 1.நகைசுவை சிற்பி.முஹம்மது யாஸின் 2.சிந்தனை கலஞ்சியம்.முஹம்மது பதுரு ஜமான் 3.கவிக்கோ.முஹம்மது உவைஸ் ஆகியோர் தத்தனது பட்டி மன்ற பதிவுகளை ஒன்றின்பின் ஒன்றாக நகைசுவை கலந்து எழுத்து வடிவில் பகிர்ந்தனர் .
நகைச்சுவை கலந்த இப்பட்டிமன்றத்தில், நடை முறை, இன்பம், துன்பம், வாழ்வாதாரம், வாழ்வியல், நெருடல்கள், நினைவுகள், கதைகள், கவிதைகள் அனுபவங்கள் , கற்பனைகள் சார்ந்த கருத்துகள் பகிரப்பட்டது ஒவ்வொரு பதிவுகளுக்கும் நடுவே நடுவர் அவர்களின் நகைசுவை கலந்த பதிவுகளும் எழுத்து வடிவிலான பட்டிமன்றம் சுவாரசியமாகவும் மிகுந்து அடுத்த பதிவுகளின் எதிர்பர்புடனும் நகைச்சுவையாகவும் நடுவே உணர்சிபுர்வமகவும்
அமைந்தது
இறுதியில் நடுவர் ஹாஜா மெய்தீன் (சிங்கை) அவர்கள் "ஆனந்தமான வாழ்க்கை திருமணத்துக்கு பின்பே...! பின்பே...! பின்பே...! என தனது அழகான தீர்ப்பை பதிவாக பகிர்ந்தார்
மேலும் இச்சிறப்பு பட்டிமன்றத்தின் விதிமுறைகளின்படி இரண்டு பதிவுகளுக்கு
பரிசுகளும் அறிவிகப்படுள்ளது
முதலாம் பரிசு இளம் புயல் காதர் அலி - பரிசுதொகை ரூ
1000 /-
இரண்டாம் பரிசு அளப்பரை அப்துல் பாசித் - பரிசுதொகை ரூ 500 /- இந்த பட்டிமன்ற ஏற்பாடுகளை பட்டிமன்ற விழா குழுவினரான
ஸ்மார்ட் தமீம் மாற்றும் ஜமால் மரைக்காயர் ஆகியோர்மிகவும்
சிறப்பான முறையில் நடத்தி முடித்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக