செவ்வாய், 31 டிசம்பர், 2013

பரங்கிப்பேட்டையில் கேசினோ பேக்கரி கிளை திறப்பு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் கேசினோ பேக்கரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரஹ்மான் டிரஸ்ட் தலைவர் அப்துல்ரஹ்மான் புதிய கிளையைத் திறந்து வைத்தார். சிதம்பரம்  நாட்டியாஞ்சலி அறக்கட்டளைச் செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டை இசட்.முகமதுஆதில் அதை
பெற்றுக்கொண்டார். கேசினோ பேக்கரி குழுமத்தின் பங்குதாரர் வழக்குரைஞர் சி.சேகர் நன்றி தெரிவித்தார். மேலும் இந்த திறப்பு விழாவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர், பேரூராட்சி மன்ற து. தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்
விழாவில் கேசினோ குழுமத்தின் பங்குதாரர் ஜி.முரளிதரன், செயலாண்மையர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்



0 கருத்துகள்:

கருத்துரையிடுக