பரங்கிப்பேட்டை:வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்
கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.
தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.
இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
பரங்கிப்பேட்டை நகரில் வங்கித்தொழிலில் ஈடுபட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இவற்றில் இந்தியன் வங்கியினை தவிர்த்து ஏனைய இரு வங்கிகளும் ஏ.டி.எம் நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.
பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்
கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.
தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.
இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
பரங்கிப்பேட்டை நகரில் வங்கித்தொழிலில் ஈடுபட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இவற்றில் இந்தியன் வங்கியினை தவிர்த்து ஏனைய இரு வங்கிகளும் ஏ.டி.எம் நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.
இந்நிலையில் பரங்கிப்பேட்டை நகரில் வங்கித்தொழிலில் ஈடுபடாத , கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் ஏ.டி.எம் நிறுவியுள்ளனர்.
ஆனால் பரங்கிப்பேட்டையின் பிரதான வங்கியும் பொதுத்துறை வங்கியுமான இந்தியன் வங்கியில் ஏ.டி.எம் சேவை இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வியப்பினையும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இதனால் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி இருக்கின்றது.இப்படியே தொடர்ந்தால் இந்தியன் வங்கி பல வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்
பரங்கிப்பேட்டை நகரில் இந்தியன் வங்கி உடனடியாக ஏ.டி.எம் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு, அதற்கேற்ப இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களான வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை மக்கள், இந்தியன் வங்கி உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும்.
படம்:MYPNO
0 கருத்துகள்:
கருத்துரையிடுக