
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடல் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் கிள்ளை, பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கடற்கரையோர மீனவ கிராமங்களான முடசல் ஓடை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் தங்கள் படகுகளை அன்னங்கோவில், முடசல் ஓடை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக மீன் வலைகளை சீர்செய்தும், படகில் தேங்கியுள்ள தண்ணீரை வெளி
யேற்றியும் வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக