வெள்ளி, 7 நவம்பர், 2014

அரசு வேலையில் காலியிடங்கள் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு!!

அரசு வேலையில் காலியிடங்கள் நமதூர்  இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு!!
5000 ஆயிரத்ற்கும் மேற்பட்டகாலிப்பணியிடங்கள் (குரூப் IV) TNPSC அறிவிப்பு  இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு!
விண்ணப்பிக்க கடைசி நாள் 12,11.2014
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி – 4ல் அடங்கியுள்ள, இளநிலை உதவியாளர் (பிணையுள்ளது) 39 இடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையற்றது) 2133 இடங்கள், தட்டச்சர் 1683 இடங்கள் சுருக்கெழுத்து தட்டச்சர் 331 இடங்கள், வரித்தண்டலர் 122 இடங்கள், வரைவாளர் 53 இடங்கள், நில அளவர் 702 இடங்கள் என மொத்தம் 4963 காலிப் பணி இடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியானது.
 
கல்வித்தகுதி:10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
வயது தகுதி:முஸ்லிம்கள் 18 வயது நிரம்பி, 32 வயதுக்குள்இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவை படித்திருந்தால் வயது வரம்பு கிடையாது,
வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 14/11/14தேர்வு நடைபெறும் நாள் 21.12.14
இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ப்பிக்க தேர்வாணைய வலைதள முகவரி www.tnpsc.gov.in & www.tnpscexams.net ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
அரசு வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயஇளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமும் அரசு அலுவகங்களில் பணி புரியலாமே! தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது,



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக