வெள்ளி, 17 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டையில் மழை, கடல் அலைகள் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, அண்ணாகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. நெய்வேலியில் நள்ளிரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை தூறி கொண்டேயிருந்தது விருத்தாசலம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது 
பரங்கிப்பேட்டை பகுதியில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே புதுக்குப்பம், சாமியார்பேட்டை, முரசல்ஓடை, பெரியகுப்பம், அன்னங்கோவில் உள்பட 50 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் கடலூரிலும் கடல் சீற்றம் இருந்தது. இதனால் மொத்தம் 3 ஆயிரம் நாட்டு படகுகள்–பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை
 
 
 
 




 
 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக