வெள்ளி, 18 ஜூலை, 2014

பரங்கிப்பேட்டை வத்த கரையில் 250 டன் மத்தி மீன்கள் வரத்து

பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை(வத்த கரை )  அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் 250 டன் மத்தி மீன்கள் வரத்து இருந்தது
இப்பகுதியை சுற்றி   சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, மடவாபள்ளம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை உள்பட 50–க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து (வத்த கரை )  அன்னங்கோவில் மீன்பிடி தளத்துக்கு எடுத்துவந்தனர். வழக்கத்தை விட அதிக அளவாக 250 டன் அளவில் மத்தி மீன்கள் சிக்கியது. இவற்றை கேரள மாநில மீன் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். ஒரு டன் மத்தி மீன்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்பனையானது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக