திங்கள், 5 மே, 2014

கோடையை குளிர்வித்த மழை பரங்கிப்பேட்டை குளிர்ந்தது.!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த கோடை மழையால் பரங்கிப்பேட்டை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கத்தரி வெயில் நேற்று தொடங்கிய நிலையில் கோடையின் உக்கிரம் மற்றும் கடும் வெப்பத்தால் மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர் இந்நிலையில்  வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக   இன்று காலை 4 மணி முதல் பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்து வருகிறது.









அதிகாலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது மேலும் தொடர்ந்து தூரல் மழை பெய்துவருகிறது.  தொடர்ந்து மழை தூறிக்கொண்டு கொண்டு இருக்கிறது.இதனால் பரங்கிப்பேட்டை குளிர்ந்து காணப்படுகிறது. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்யும் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
புதுவையிலும் நேற்று காலை மழை கொட்டியது. இன்று அதிகாலையிலிருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.
படங்கள்:அல் அமீன்& தாஹீர் அபு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக