வியாழன், 9 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சூறையாடல் சங் பரிவார கும்பல் அட்டகாசம்...

கெளஷாம்பி, காஸியாபாத்: டெல்லி அருகே காஸியாபாத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு அருகே உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தை சிலர் தாக்கி சூறையாடினர்.அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய அவர்கள் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். கிட்டத்தட்ட 60 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.காஸியாபாத்தின்
கெளஷாம்பியில்தான் கெஜ்ரிவாலின் குடியிருப்பு உள்ளது. இந்த வீட்டுக்கு அருகில்தான் தாக்குதலுக்குள்ளான ஆம் ஆத்மி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று முற்பகல் 11 மணியளவில் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியது.செங்கற்களைத் தூக்கி எறிந்தும், தடிகளால் தாக்கியும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் தெரிவித்தனர்.கையில் இவர்கள் கொடிகளைப் பிடித்தவாறு வந்துள்ளனர். பின்னர் உள்ளே புகுந்து கல்வீசியும், சரமா்ரியாக தடிகளால் அடித்தும் தாக்கியுள்ளனர். இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.தாக்குதல் நடத்தியவர்கள் ஹிந்து பாதுகாப்பு குழு என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களாம். சம்பவம் நடந்தபோது அலுவலகத்தில் மிகக் குறைந்த அளவிலான பாதுகாப்பே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக