சிதம்பரம்:சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகரில் வார்டு வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும் குறிப்பிட்ட தேதிகளில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அன்றைய தினம் ஊரில் இல்லாதவர்கள் புகைப்படம் எடுக்க முடியாமல் போனது. இதனால் சிதம்பரம் வட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேல் புகைப்படம் எடுக்காமல் உள்ளனர்.
மேலும் சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இதுவரை சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை. ஏற்கெனவே புகைப்படம் எடுத்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆதார் அட்டை வரவில்லை.
இந்நிலையில், ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படமாட்டாது என கேஸ் ஏஜென்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர். எனவே சிதம்பரம் வட்டத்தில் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகரில் வார்டு வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும் குறிப்பிட்ட தேதிகளில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அன்றைய தினம் ஊரில் இல்லாதவர்கள் புகைப்படம் எடுக்க முடியாமல் போனது. இதனால் சிதம்பரம் வட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேல் புகைப்படம் எடுக்காமல் உள்ளனர்.
மேலும் சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இதுவரை சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை. ஏற்கெனவே புகைப்படம் எடுத்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆதார் அட்டை வரவில்லை.
இந்நிலையில், ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படமாட்டாது என கேஸ் ஏஜென்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர். எனவே சிதம்பரம் வட்டத்தில் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக