திங்கள், 30 செப்டம்பர், 2013

108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு கடலூரில் வரும் 3ம் தேதி நேர்காணல்

கடலூர்:இலவச ஆம்புலன்ஸ் பிரிவில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்காணல் முகாம் வரும் 3ம் தேதி கடலூரில் நடக்கிறது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் இயங்கி வரும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 3ம் தேதி கடலூரில் நடக்கிறது.ஓட்டுனர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும், 25 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், 162.5 செ.மீ., உயரமுடையவராகவும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து ஐந்தாண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., நர்சிங், விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, பைக்ரோ பயாலஜி, உயிரியல், "லைப் சயின்ஸ்' அல்லது ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., - டி.என்.ஏ., - டி.எம்.எல்.டி., - டி.பார்ம் முடித்தவராகவும், 19 முதல் 30 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் பிற சான்றிதழ்களுடன் வரும் 3ம் தேதி கடலூர், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். டிரைவர் பணிக்கு எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண் பார்வை சோதனை மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வு நடைபெறும். தேர்வு பெறுபவர்களுக்கு எட்டு நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு, உடற்கூறியல், முதலுவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு நடைபெறும்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் 044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக