
கடலூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டி நேற்று நடந்தது.முதல்வர் கோப்பைக்கான இப்போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் நந்தகுமார் துவக்கி வைத்தார். விழாவில், சிவராஜ், கிருஷ்ணசாமி, கோவிந்தராஜ், பூப்பந்தாட்ட கழக செயலர் வைத்தியநாதன் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.ஆண்கள் பிரிவில் 10 அணிகளும்,
பெண்கள் பிரிவில் 4 அணிகளும் விளையாடின. போட்டியில் பரங்கிப்பேட்டை B M D , A அணி சீனியர் வென்றது ஜூனியர் பிரிவில் B M D, B அணி இரண்டாம் இடம் பெற்றது வென்ற அணிகளுக்கு மாலையில் நடந்த விழாவில் பரிசு வழங்கப்பட்டது.போட்டியில் சிறந்த வீரர்களாக ஆண்கள் பிரிவில் 7 பேரும், பெண்கள் பிரிவில் 7 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
படங்கள் :கவுஸ் அலி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக