வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டையில் பள்ளிக் கட்டடங்கள் பயன்பாடற்று வீணாகிறது:அரசு அலுவலகங்களை மாற்ற நடவடிக்கை தேவை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள் ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் கட்டடத்தின் மேல் செடிகள் முளைத்து வீணாகி வருகிறது. இங்கு அரசு அலுவலகங்களைக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுனாமி தாக்குதலின்போது பரங்கிப்பேட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளைச் செய்தன. ராஜஸ்தான் அரசு, தனது பங்களிப்பாக அரசு மருத்துவமனை, பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைக் கட்டிக் கொடுத்தது.
புதிய பள்ளி கட்டடத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும், அரசு ஆண்கள் பள்ளி இயங்கி வந்த இடத்தில் வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளியும் மாற்றப்பட்டது. அதனால் பெண்கள் பள்ளி கட்டடங்கள் பயன்படுத்தப்  படாமல் கிடந்தது.
பள்ளி கட்டடங்கள் இருந்த இடத்தில் அரசு அலுவலகங்களைக் கொண்டு வர பொதுமக்கள் அப்போது கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னுவிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற கலெக்டர் அரசு பெண்கள் பள்ளியைப் பார்வையிட்டு வருவாய் அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மற்றும் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த மின்சார அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அலுவலகங்களை ஒரே இடத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆனால் அதிகாரிகள் ஆறு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டிற்கு முன் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நூலகம் பள்ளி
கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
மற்ற அலுவலகங்கள் இன்னும் மாற்றப்படாததால் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
கட்டடத்தில் இருந்த தண்ணீர் குழாய்கள், மின்சார ஒயர்கள் சேதமடைந்து, செடிகள் முளைத்து கட்டடங்கள் பாழாகிறது.
பள்ளி கட்டடம் உள்ள பகுதிகளில் முட் செடி
கள் அதிகளவில் முளைத்து அந்தப் பகுதி முழுவதும் முள்காடாகி வருகிறது.
திட்டமிட்டபடி வருவாய் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மின் அலுவலகம் ஆகியவற்றைப் பள்ளி கட்டடத்திற்கு கொண்டுவர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக