
எப்போது வரும்? எப்போதுபோகும்? என்று புரியாத நிலையில் தினம்
தினம் இந்த மின்வெட்டு பிரச்சினைக்கு ஆளாகியிருக்கும் பரங்கிப்பேட்டை பொதுமக்களின்
அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
அதுவும் குறிப்பாக இஸ்லாமிய பெருமக்கள் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை மின்சாரம் தடைபடகிறது.
மேலும் ரமளான் மாத நோன்பையொட்டி சஹர் நேரப்பொழுதுகளில் எழுந்து பணிகளை
மேற்கொள்ளும்போது 4 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் தடைபடுகிறது. அது
மட்டுமின்றி, காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3
மணி வரையிலும் என அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மிகவும் சிரமத்திற்கு
ஆளாகியுள்ளனர்.
நன்றி : mypno.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக