ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டையில் தகராறு வாலிபரைத் தாக்கியவருக்கு வலை

பரங்கிப்பேட்டை:முன்விரோதம் காரணமாக வாலிபரைத் தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியைச் சேர்ந்தவர் வீரமணி, 35. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காந்திக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் தெருவில் நடந்து சென்ற வீரமணியை, காந்தி வழிமறித்து இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
வீரமணி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து காந்தியை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக