வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணை: 45-வது முறையாக மீண்டும் ஒத்திவைப்பு

பரங்கிப்பேட்டை:தேர்தல் விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்ததால் தேர்தல் கமிஷன் சார்பில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கின் விசாரணை 45-வது முறையாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்
பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனுதாக்கல் செய்ததால், அவர் மீது தேர்தல் கமிஷன் வழக்குத் தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.

அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி வழக்குத் தொடர்ந்தார்.

பின்னர் ஜெயலலிதா மேல்முறையீட்டின்படி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவுப் பிறப்பித்தது.

தடை உத்தரவினால் இதுவரை இவ்வழக்கு 44 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதி (பொறுப்பு) ராபர்ட் கென்னடி ரமேஷ் இவ்வழக்கை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக