பரங்கிப்பேட்டை:
இன்று புனித ரமலான் நோன்பு நோற்க ஆயாத்தாமாகி கொண்டிருந்த நிலையில் பரங்கிப்பேட்டை
உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பிறை தென்படுவதில்
சிரமம் ஏற்பட்டு இன்று நோன்பா இல்லையா என மக்கள் குழம்பி போயிருந்தனர் .
இந்நிலையில் இளையான்குடி அருகில் உள்ள சிற்றூரில் பிறை கண்டதாக கிடைத்த தகவலின்
அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு ஆரம்பம் என தமிழக தலைமை காஜி
சலாஹுத்தீன் அய்யூபி கூறினார் . 
இதைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை இரவு 8 மணிக்கு
அனைத்து பள்ளிவாசல்களிலும் ரமலான் நோன்பின் ஆரம்பத்திற்கு அறிவிப்பாக தக்பீர்
கூறப்பட்டது. இஷா தொழுகைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளிலும் தராவீஹ் தொழுகை
நடைபெற்று வருகிறது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக