புதன், 5 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டை டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம்

பரங்கிப்பேட்டை : பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மற்றும் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள மதுக்கடையை உடனே அகற்றக்கோரி  டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம்  அனைத்து கட்சி சார்பில் அறிவித்து இருந்ததது இதில் பிரதான அனைத்து கட்சிகளும் பங்கேற்று பேருந்து நிலையத்தில் உள்ள மதுக்கடையை முற்றுகை போராட்டம் நடந்தது.போராட்டத்தில்  மனிதநேய மக்கள் கட்சி.திமுக,..விடுதலை சிறுத்தைகள்  ,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,தேமுதிக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பங்கேற்று கைதாகினர் டாஸ்மாக்
கடைகளை குறிவைத்தே போராட்டம் நடைபெறுவதால் வியாபாரம் தடைபடாமல் இருக்க மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  கைதாகி உள்ள அனைவரும் HMH மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் மாலை விடுவிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
 
 



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக