சனி, 22 ஆகஸ்ட், 2015

பிச்சாவரத்திற்கு பரங்கிப்பேட்டை வழியாக மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை:சென்னை, விழுப்புரம், கடலுாரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு  இயக்கிய அரசு பஸ்களை மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிச்சாவரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்கு ஏற்ப கடலூர் சென்னை, விழுப்புரத்தில் இருந்து மாளிகை மேடு வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டது. 
சமீப காலமாக இரு வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் திடீரென
நிறுத்தப்பட்டன. அதேப்போன்று, கடலுாரில் இருந்து தொழிற்பேட்டைகள் மற்றும் கடலோர கிராமங்கள் வழியாக பிச்சாவரத்திற்கு இயக்கப்பட்ட அரசு கடந்த  தி மு க ஆட்சியில் இயக்கிய பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சுற்றுலாத்துறை மூலம் பிச்சாவரத்திற்கு பயணிகள் வந்து செல்லும் வகையில் ஏற்கனவே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை குறிப்பிட்ட வழித்தடங்களில் வழியாக பிச்சாவரத்திற்கு மீண்டும் இயக்க வேண்டும். சிதம்பரத்தில் இருந்து கீழமூங்கிலடி, மண்டபம், கிள்ளை வழியாக பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் சென்று வரும் வகையில் புதிதாக பஸ் இயக்க வேண்டும் என சுற்றுப்பகுதி மக்கள் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக