ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

வங்கிகள் இனி 2வது, 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை! செப் 1 ஆம் தேதி முதல் அமல்

டெல்லி:வங்கிகளுக்கு இனி 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

தற்போது, பொதுத் துறை, தனியார் துறை வங்கிகள் சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகின்றன. ஆனால், மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் செப்டம்பர்1 ஆம் தேதி முதல், வங்களுக்கு 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க (ஏ.ஐ.பி.ஈ.ஏ.) பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய நடைமுறை தொடர்பான அறிவிக்கை, விரைவில் வெளியாகும். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால், வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைவதுடன், அவர்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக