பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கியது.முஸ்லிம்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது ஆகும் கடந்த (17.06.2015) மாலை நேரம் தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்படததால் இஸ்லாமிய மாதம் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து (18.06.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை (மஹரிப்) முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் கணக்கிடப்பட்டுள்ளது பரங்கிப்பேட்டை யில் இரவு (இஷா) தொழுகைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளிலும் இரவுநேர சிறப்பு தொழுகை நடைபெற்றறது. இதனடிப்படையில் (19/06/2015) இன்று முதல் தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு துவங்கியுள்ளது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இதே போன்றே ஷ'பான் மாதத்தை 30 ஆக கணக்கிட்டு இன்று முதல் ரமலான் முதல் நோன்பு தொடங்குகிறது என்று அறிவித்துள்ளது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இதே போன்றே ஷ'பான் மாதத்தை 30 ஆக கணக்கிட்டு இன்று முதல் ரமலான் முதல் நோன்பு தொடங்குகிறது என்று அறிவித்துள்ளது









0 கருத்துகள்:
கருத்துரையிடுக