சனி, 22 நவம்பர், 2014

பரங்கிப்பேட்டையில் மா.கம்யூ சார்பில் புகைப்பட கண்காட்சி


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை குமரக்கோவில் தெருவில் ஒன்றிய மா.கம்யூ., சார்பில் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நடந்தது. ஒன்றியக்குழு ராஜாராமன் தலைமை தாங்கினார். நகர செயலர் வேல்முருகன், பரமானந்தம் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார். புகைப்பட கண்காட்சியை மாவட்டக்குழு ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கண்காட்சியில் மா.கம்யூ., சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செய்த போராட்டங்கள், சட்டசபை மேம்பாட்டு நிதியில் இருந்து பொதுமக்களுக்கு பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., செய்த சாதனைகள், மா.கம்யூ., கட்சியின் வரலாறு உள்ளிட்டவைகள் இடம் பெற்றிருந்தது. ஒன்றிய செயலர் ரமேஷ்பாபு, ஒன்றியக்குழு ஜெயசீலன், லெனின், குப்புசாமி, முன்னாள் ஒன்றிய செயலர் சுதாகர், விவசாய அணி கருணைச்செல்வம், அன்பரசு, புஷ்பா, வினோபா, மணி, தனசேகரன், ஜோதிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக