செவ்வாய், 11 நவம்பர், 2014

கடலூரில் நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் பாஸ்போர்ட் சேவை முகாம்

கடலூர்:கடலூரில் நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறுகிறது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் 11ஆம் தேதிக்கு முன்னர், கடவுச் சீட்டுக்கு சாதாரண முறையில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
முகாமுக்கு வருபவர்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிடச் சான்று, அடையாளச் சான்று, கல்வித் தகுதி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின் அசல், சுய கையொப்பமிட்ட நகல்களை எடுத்து வர வேண்டும்  .இந்த சிறப்பு முகாமில் ‘தட்கல்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக