சனி, 18 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டை அருகே சாலையோர மரத்தில் கார் மோதல்; இருவர் பலி 5 பேர் படுகாயம்(updated)

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
 
விழுப்புரம் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (வயது 50), விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் பில்லூரில் இருந்து கடலூர் வழியாக நாகூர் நோக்கி நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவருடைய உறவினர் அதே ஊரை சேர்ந்த பழனி மகன் மோகன் (35) ஓட்டினார்.
கடலூர்–சிதம்பரம் சாலையில் சின்னகுமட்டி அருகே சென்ற போது திடீரென்று கார் மோகனின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த வீராசாமி மனைவி ஆண்டாள் (46) படுகாயம் அடைந்து அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் வீராசாமி, அவருடைய மகன் சக்திமுருகன் (28), மகள் ஜீவிதா (17), டிரைவர் மோகன், அவருடைய மனைவி கீதா (30), உறவினர் வேல்முருகன் மகன் வெற்றிவேல் (9) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார்  விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உயிரிழந்த ஆண்டாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மேலும்  பரங்கிப்பேட்டையை சார்ந்த சில தன்னார்வ இளைஞர்கள் போலிசருடன் இணைந்து இந்த கோர விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்டனர்..


 
updeted
படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த.  திமுருகன் என்பவர்   சிகிழ்ச்சை பலனின்றி நேற்று உயிழந்தார்.இதுகுறித்து வீராசாமி கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


படங்கள் :முகநூல்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக