செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

கொசு ஒழிப்புப் போராட்டம்; அசத்தும் பரங்கிப்பேட்டை அன்வர் (விடியோ இணைப்பு )

சிங்கப்பூர்:வரலாற்று சிறப்பு மிக்க பரங்கிப்பேட்டை மக்கள், தான் பிறந்த இடங்களில் மட்டுமல்லாது வியாபாரம், தொழில் செய்ய சென்ற இடங்களிலும், பணியாற்ற சென்ற இடங்களிலும் மனித நேயத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. 

சுனாமி, கடும் புயல், வெள்ளப் பெருக்கு போன்ற சமயங்களில் "மனிதம்" மட்டுமே பரங்கிப்பேட்டைவாசிகளிடம் இருந்ததை உள்ளூர்வாசிகள் முதல் உலக ஊடகங்கள் வரை பாராட்டின.




அந்த வகையில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் பரங்கிப்பேட்டை அன்வர் ஹஸன், அந் நாட்டில் பெருகிவரும் கொசுக்களை ஒழிப்பதற்கும், டெங்கு போன்ற வியாதிகளை விரட்டியடிப்பதற்கும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் போராடிக் கொண்டிருப்பதை சிங்கப்பூர் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

சகோதரர் அன்வர் அவர்களை அறிமுகப்படுத்துவதுடன் அவரின் சேவைகள் தொடரவும் PNO Express வாழ்த்துகிறது







நன்றி:mypno






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக