புதன், 19 மார்ச், 2014

ILFS பவர் பிளான்ட் நிறுவனத்தைக் கண்டித்து நாளை போராட்டம்



பரங்கிப்பேட்டை : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்கள் வாழ்வாதார மீட்பு இயக்கம் மற்றும் போராட்டக்குழு சார்பில் புதுச்சத்திரத்தில் நாளை (20ம் தேதி) தொடர் முழக்க போராட்டம்
நடக்கிறது.பரங்கிப்பேட்டை  அடுத்த கரிக்குப்பம் பகுதியில் ஐ.எல்.எப்.எஸ்., என்ற தனியார் அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம்
பாதிக்கும் என பொதுமக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.அதில், தற்போது நடக்கும் கட்டுமானப் பணியில் இப்பகுதி
மக்களுக்கு வேலை அளிக்க வேண்டும். கம்பெனி நிரந்தர பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது இப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறு
மூலம் நீர் எடுப்பதை விடுத்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தையில் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றாததைத் தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்கள் வாழ்வாதார மீட்பு இயக்கம் மற்றும் போராட்டக்குழு சார்பில் புதுச்சத்திரம் பஸ் நிலையம் அருகில், நாளை (20ம் தேதி) காலை 10:00 மணிக்கு தொடர் முழக்க போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக