2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிடப்பட்ட சதி என்றும், அதனைத் தொடர்ந்து நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரைத் தடுத்துவைத்தும்
கலவர தீ அடங்காமலிருப்பதில் மோடிக்கு மறைமுக தொடர்பு உண்டு என்பதை அம்மாநில காவல்துறை உயரதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் போட்டுடைத்தனர்.இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குஜராத் முதலமைச்சர் மோடியிடம், "குஜராத் கலவரங்களில் சிறுபான்மை முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டதா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, காரை ஓட்டிச் செல்லும்போது அல்லது காரின் பின் இருக்கையில் நாம் அமர்ந்திருக்கும்போது அந்த காரில் நாய்குட்டி ஒன்று அடிப்பட்டால் எவ்வாறு வருத்தம் ஏற்படுமோ, அதுபோல் தாமும் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
சிறுபான்மையினரிடமிருந்து மட்டுமின்றி நடுநிலை மற்றும் சமயசார்பற்ற அரசியல் தலைவர்கள் அனைவரும் மோடியின் இந்தக் கருத்தைக் கடுமையாக கண்டித்தனர். எனினும், பாஜக மற்றும் மோடி தரப்பிலிருந்து இதற்காக மன்னிப்புக்கேட்கவோ அல்லது குறைந்த பட்சம் தமது கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாகவோக்கூட சொல்லாததன் மூலம் மோடியின் சிறுபான்மையினர் விரோத மனத்துவேசம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸின் நிர்ப்பந்தத்தால் பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மோடியைச் சிறந்த நிர்வாகியாகக் காட்டுவதற்காக, அவரது கட்சியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டுள்ள அம்பானி உள்ளிட்ட உலகமகா கோடீஸ்வரர்கள் பெரும் தொகையைச் செலவளித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆப்கோ நிறுவனம் மூலமாக ஊடகங்களில் மோடியின் இமேஜை தூக்கி நிறுத்துவதற்காக தினந்தோறும் கட்டுக்கதைகளைப் பரப்பியும்கூட, மோடியின் அவ்வப்போதைய நடவடிக்கைகளால் அவரது அப்பட்டமான சமய சார்பு நிலைப்பாடை மறைக்க முடியவில்லை.
உத்ரகாண்ட் இயற்கைப் பேரழிவில் சிக்கிக்கொண்ட குஜராத் இந்து பக்தர்களை மீட்பதிலாகட்டும், பாட்னா குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களைச் சந்திப்பதிலாகட்டும், மனிதாபிமான அணுகுமுறை என்பதைவிட சமய சார்பு கரிசனம் மட்டுமே அவரிடம் தெரிகிறது. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதே மோடியின் நோக்கமெனில், மணிப்பூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்குச் சிறுகண்டனம்கூட அவர் தெரிவிக்கவில்லை. பாட்னாவில் பலியானோரைவிட இம்பாலில் கூடுதல் உயிரிழப்புகள் இருந்த போதிலும், தமது அரசியல் எதிரி நிதீஷ் குமார் ஆளும் பீகாரைச் சுற்றியே அவர் நடவடிக்கைகள் இருப்பதிலிருந்து மோடியின் மதவாத மலிவு அரசியல் அம்பலத்திற்கு வந்துள்ளது.
குஜராத் முஸ்லிம்களின் உயிர்கள் சாலையில் குறுக்கேவந்த நாய்குட்டியின் உயிரளவுக்கும், மணிப்பூர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களைப் பொருட்டாகவே மதிக்காமலும், பீகார் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு மட்டும் ஆறுதல் தெரிவிப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த மதசார்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
சிறுபான்மையினரிடமிருந்து மட்டுமின்றி நடுநிலை மற்றும் சமயசார்பற்ற அரசியல் தலைவர்கள் அனைவரும் மோடியின் இந்தக் கருத்தைக் கடுமையாக கண்டித்தனர். எனினும், பாஜக மற்றும் மோடி தரப்பிலிருந்து இதற்காக மன்னிப்புக்கேட்கவோ அல்லது குறைந்த பட்சம் தமது கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாகவோக்கூட சொல்லாததன் மூலம் மோடியின் சிறுபான்மையினர் விரோத மனத்துவேசம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸின் நிர்ப்பந்தத்தால் பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மோடியைச் சிறந்த நிர்வாகியாகக் காட்டுவதற்காக, அவரது கட்சியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டுள்ள அம்பானி உள்ளிட்ட உலகமகா கோடீஸ்வரர்கள் பெரும் தொகையைச் செலவளித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆப்கோ நிறுவனம் மூலமாக ஊடகங்களில் மோடியின் இமேஜை தூக்கி நிறுத்துவதற்காக தினந்தோறும் கட்டுக்கதைகளைப் பரப்பியும்கூட, மோடியின் அவ்வப்போதைய நடவடிக்கைகளால் அவரது அப்பட்டமான சமய சார்பு நிலைப்பாடை மறைக்க முடியவில்லை.
உத்ரகாண்ட் இயற்கைப் பேரழிவில் சிக்கிக்கொண்ட குஜராத் இந்து பக்தர்களை மீட்பதிலாகட்டும், பாட்னா குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களைச் சந்திப்பதிலாகட்டும், மனிதாபிமான அணுகுமுறை என்பதைவிட சமய சார்பு கரிசனம் மட்டுமே அவரிடம் தெரிகிறது. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதே மோடியின் நோக்கமெனில், மணிப்பூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்குச் சிறுகண்டனம்கூட அவர் தெரிவிக்கவில்லை. பாட்னாவில் பலியானோரைவிட இம்பாலில் கூடுதல் உயிரிழப்புகள் இருந்த போதிலும், தமது அரசியல் எதிரி நிதீஷ் குமார் ஆளும் பீகாரைச் சுற்றியே அவர் நடவடிக்கைகள் இருப்பதிலிருந்து மோடியின் மதவாத மலிவு அரசியல் அம்பலத்திற்கு வந்துள்ளது.
குஜராத் முஸ்லிம்களின் உயிர்கள் சாலையில் குறுக்கேவந்த நாய்குட்டியின் உயிரளவுக்கும், மணிப்பூர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களைப் பொருட்டாகவே மதிக்காமலும், பீகார் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு மட்டும் ஆறுதல் தெரிவிப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த மதசார்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
இத்தகைய "இந்து தேசியவாதிகள்" மதச்சார்பற்ற இந்தியாவின் ஜனநாயகத் தத்துவத்தைக் குழி தோண்டி புதைப்பவர்களாகவே செயல்படுவர் என்பது வெள்ளிடைமலை! மக்களும் இவர் விசயத்தில் மிகத் தெளிவாகவே உள்ளனர்!
கட்டுரையாளர்- எழில் பிரகாசம்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக