வியாழன், 10 அக்டோபர், 2013

ரூ. 13 கோடி செலவில் மீன்பிடி இறங்கு தளம் பணி 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் ரூ.13 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்கு தளம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் ரூ.13 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளத்திற்கான கட்டட பணிகள், சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்து திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் உள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் அவர்களின் வாழ்
வாதாரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்து
வாரம் வழியாக கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மத்தி, சூரை, சுங்கான், வஞ்சரம் உள்ளிட்ட மீன் வகைகள் தினமும் சுமார் 50 டன் அளவிற்கு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.
கடலில் இருந்து படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன் வகைகள் அன்னங்கோவில் மண் தரையில் சுகாதாரமற்ற நிலையில் பேக்கிங் செய்யப்பட்டு வந்தது. ஏலம் விடப்படும் மீன் வகைகள் பேக்கிங் செய்ய நீண்ட தூரம் கூலி ஆட்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதால் மீனவர்களுக்குச் செலவு ஏற்பட்டு வந்தது.
இதனால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளம் கட்டித்தரக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்னங்கோவிலில் ரூ. 13 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. வெள்ளாற்றில் டிரஜ்ஜர் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு, கடலில் பிடித்து வரும் மீன்களை ஏலம் விட 3 கட்டடங்கள், மீனவர்களின் வலை
களை உலர்த்த 2 கட்டடங்கள், மீன் விற்பனை செய்ய 3 கட்டடங்கள் என 120 அறைகள் கட்டப்பட்டன. குடிநீர், வாகனங்கள் பார்க்கிங் வசதி, நிர்வாக அலுவலகம், மீன் பதப்படுத்தும் ஐஸ் பிளாண்ட், சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழாவிற்காக தயாராக உள்ளது. மீன்பிடி இறங்குதளத்தால் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் அதிகரிக்கும்.



 

 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக