வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மீண்டும் மின்சாரப் பற்றாக்குறை : தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு

சென்னை:காற்றாலைகளின் உபயத்தால் கடந்த மூன்று மாதங்களாகத் தவிர்க்கப்பட்டு வந்த மின்வெட்டு, நேற்றுமுதல் தமிழகத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 காற்றாலைகளின் வழியே, தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக மின்சாரத் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டு வந்தது. ஆனால்  2 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று (புதன்கிழமை ) 254 மெகாவாட்டாகக் குறைந்தது. இதனையடுத்து, நேற்று காலை 1,703 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக