திங்கள், 29 ஜூலை, 2013

480 அரசுப் பள்ளி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் திடீர் டிஸ்மிஸ்

சென்னை: தமிழகத்தில் முறையான கல்வித் தகுதியுடன் இல்லாத 480 கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர்களை அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.இதனால் இந்த ஆசிரியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 480 தகுதி இல்லாத கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.இருப்பினும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பணியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் அத்தனை பேரையும் தற்போது மொத்தமாக டிஸ்மிஸ் செய்து விட்டது அரசு.இதனால் ஆசிரியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக