புதன், 8 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் போக்குவரத்து நெரிசல்!

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனை, வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் எப்போதும் அந்த பகுதி பிசியாகவே இருக்கும். அலுவலங்களுக்குச் செல்பவர்கள் தங்களது கார், பைக்குகள் மற்றும் மொபட்டுகளை சாலையிலேயே நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குச் சென்று விடுகின்றனர்.மேலும் அந்த தெருவில் ஒரு சில இடங்களில் உள்ள மரத்தின் நிழலில் பைக்குகளை நிறுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது பரங்கிப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக