இந்தியா முழுவதும் இரண்டாவது தவணையாக ஏப்ரல்
15-ம் தேதி போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
இளம்பிள்ளை வாதத்தை (போலியோ) அறவே ஒழிக்கும்
நோக்கத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து இலவசமாக
அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் தவணையாக பிப்ரவரி 19-ம் தேதி
போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
இதில் இந்தியா முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட 17
கோடி குழந்தைகளுக்கும், தமிழகத்தில் மட்டும் 65 லட்சம் குழந்தைகளுக்கும் சொட்டு
மருந்து அளிக்கப்பட்டது இரண்டாவது தவணையாக ஏப்ரல் 15-ம் தேதி போலியோ சொட்டுமருந்து
முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் ஆரம்ப சுகாதார
நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், பஸ், ரயில் மற்றும்
விமான நிலையங்கள் உள்பட 40,399 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
அளிக்கப்படும்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக