செவ்வாய், 20 மார்ச், 2012

ஐக்கிய அரபு நாடுகளில் ஒட்டக பால் ஐஸ்கிரீம்


ஐக்கிய அரபு நாடுகளில் ஒட்டக பால் ஐஸ்கிரீம்
தற்போது பசு மற்றும் எருமைப்பாலில் இருந்து சுவை மிகுந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. அது போன்று ஐக்கிய அரபு நாடுகளில், அங்கு வளர்க்கப்படும் ஒட்டகங்களின் பாலில் இருந்தும் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்படுகிறது.


பொதுவாக பசும் பாலை விட ஒட்டக பாலில் உப்பு சத்து அதிகம். எனவே சாப்பிடும் போது உப்பு தெரியாமல் இருக்க இனிப்பு சுவை அதிகம் உள்ள நறுமண பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.


ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது இவை விற்பனைக்கு வந்துள்ளன. சுத்தமான ஒட்டக பாலினால் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் ஐக்கிய அரபு நாடுகளின் பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது.


இவற்றை தயாரிக்க பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள் அங்குள்ள மார்க்கெட்டுகளில் கிடைக்கவில்லை. எனவே அவற்றை தயாரிக்க நீண்ட நாட்கள் ஆனதாக ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


பேரீச்சம்பழம், குங்குமப்பூ, சாக்லேட் மற்றும் கேரமல் ஆகிய 4 சுவைகளில் இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இது பொதுமக்களை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக