
சிதம்பரம் காந்திசிலை அருகே சிதம்பரம், காட்டுமன்னார்குடி தாலுகா ஒன்றுபட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் விவசாயத்துக்குத் தேவையான நீர் அதாரத்தைப் பெருக்கக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியதாவது:
விவசாயத்தை காக்க வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.
சிதம்பரத்தின் மொத்தக் கழிவு நீரும் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் பிச்சாவரம் உள்ளிட்ட 25 கிராம விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் கலப்பதை உடனே தடுக்க வழி செய்யவேண்டும்.

இதில் அனைத்து விவசாயிகளும் சங்க வித்தியாசம் இல்லாமல் பங்கேற்று ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் சங்க என்.ராமமூர்த்தி, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.கண்ணன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் டி.விநாயகமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக